ஒன்றிய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வரும் அரசியல் கட்சிகளை ஒடுக்க புலனாய்வு அமைப்புகளை தொடர்ந்து ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துகிறது என்றும், அரசமைப்பு சாசனத்தின்படி நிறுவப்பட்ட அமைப்புகளில் ஒன்றிய அரசின் தேவையற்ற தலையீடு இருப்பதாகவும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.